Advertisement

எங்கும் ஓடி ஒளிய முடியாது... 3 போட்டிகளிலும் விளையாடுகிறேன்

By: Nagaraj Sat, 24 Oct 2020 8:02:17 PM

எங்கும் ஓடி ஒளிய முடியாது... 3 போட்டிகளிலும் விளையாடுகிறேன்

தொடர் தோல்விகளால் எங்கும் ஓடி ஒளிந்து கொள்ள முடியாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

துபாய் சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொலார்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கர்ரான் மட்டும் 52 ரன்கள் எடுத்தார்.

மற்ற அனைத்து வீரர்களும் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் வெளியேறியதால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் டிரண்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளையும், பும்ராஹ் மற்றும் ராகுல் சாஹர் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12.2 ஓவரிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளனர்.

Tags :