Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 2010 சீசனில் படுபதாளத்தில் இருந்து, பின்னர் வீறுகொண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி

2010 சீசனில் படுபதாளத்தில் இருந்து, பின்னர் வீறுகொண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி

By: Karunakaran Wed, 14 Oct 2020 7:06:25 PM

2010 சீசனில் படுபதாளத்தில் இருந்து, பின்னர் வீறுகொண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி

பிளே ஆஃப்ஸ சுற்று என்றாலே அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கட்டாயம் இருக்கும். இருப்பினும் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தில் வேகம் இல்லை. சீசனின் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010-ல் பாதி தொடரில் எப்படி இருந்ததோ, அதே நிலையில் அப்படியே உள்ளது.

அப்போது முதல் இடத்தை பிடித்திருந்த அணியும் தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது. 2010 சீசனுக்கும் 2020 சீசனுக்கும் அப்படியே ஒற்றுமை உள்ளது என்பதால் இந்த முறை சிஎஸ்கே-விற்குத்தான் கோப்பை என அதீத நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். 2010 சீசன் சென்னை அணிக்கு 3-வது தொடர். 2020 இரண்டு கால தடைக்குப்பின் 3-வது தொடர்.

chennai team,championship,2010 season,ipl 2020 ,சென்னை அணி, சாம்பியன்ஷிப், 2010 சீசன், ஐபிஎல் 2020

2010-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று பாயின்ட் டேபிளில் கடைசி இடத்தை பிடித்திருந்தது. தற்போதும் பஞ்சாப் அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது. இரண்டு வெற்றிகளும் வெளி மைதானத்தில் கிடைத்ததுதான். தற்போதும் அதேபோல் கிடைத்துள்ளது. 2010-ல் மும்பை இந்தியன்ஸ் முதலிடத்தில் இருந்தது. தற்போதும் மும்பை இந்தியன்ஸ் அணிதான் முதல் இடத்தில் உள்ளது.

2010-ல் 2-வது பாதி சீசனில் வீறுகொண்டு எழுந்து 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று சென்னை அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதன்பின், அரையிறுதி, இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால், சென்னை அணிக்கு வாய்ப்பு இருக்கிறது ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர். 8-வது போட்டியில் ஐதராபாத் அணியை சிஎஸ்கே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :