Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • லங்கா பிரிமீயர் லீக்கில் கொழும்பு கிங்ஸ் அணி டு பிளிஸ்சிஸ், ரஸல் ஆகியோரை ஏலம் எடுத்தது

லங்கா பிரிமீயர் லீக்கில் கொழும்பு கிங்ஸ் அணி டு பிளிஸ்சிஸ், ரஸல் ஆகியோரை ஏலம் எடுத்தது

By: Karunakaran Tue, 20 Oct 2020 8:30:00 PM

லங்கா பிரிமீயர் லீக்கில் கொழும்பு கிங்ஸ் அணி டு பிளிஸ்சிஸ், ரஸல் ஆகியோரை ஏலம் எடுத்தது

13-வது ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் சென்னை அணியில் டு பிளிஸ்சிஸ் இடம் பிடித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை போன்று இலங்கையில் லங்கா பிரமீயர் லீக் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனாவால் அறிமுகம் ஆவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் அடுத்த மாதம் 21-ந்தேதி முதல் டிசம்பர் 13-ந்தேதி வரை ஐந்து அணிகள் மோதும் வகையில் லங்கா பிரமீயர் லீக் தொடர் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர்.

colombo kings,du bliss,russell,lanka premier league ,கொழும்பு கிங்ஸ், டு பிளிஸ், ரஸ்ஸல், லங்கா பிரீமியர் லீக்

கிறிஸ் கெய்லை கண்டி டஸ்கடர்ஸ் அணியும், கார்லஸ் பிராத்வைட்டை தம்புல்லா ஹாக்ஸ் அணியும், தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லரை தம்புல்லா அணியும், பாகிஸ்தானின் ஷாகித் அப்ரியை காலே கிளாடியோட்டர்ஸ் அணியும், சோயிப் மாலிக்கை ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணியும் எடுத்துள்ளது.

இந்நிலையில் சென்னை அணியில் இடம் பெற்றுள்ள டு பிளிஸ்சிஸை கொழும்பு கிங்ஸ் அணி ஏலம் எடுத்தள்ளது. மேலும் அந்த்ரே ரஸல் ஆகியோரையம் கொழும்பு கிங்ஸ் அணி ஏலம் எடுத்தள்ளது. ஐபிஎல் போட்டிக்கு பின் டு பிளிஸ்சில் கொழும்பு கிங்ஸ் அணிக்காக லங்கா பிரமீயர் லீக்கில் விளையாட உள்ளார்.

Tags :