Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஒவ்வொரு 5 நாட்கள் இடைவெளியிலும் வீரர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படும் - இந்திய கிரிக்கெட் வாரியம்

ஒவ்வொரு 5 நாட்கள் இடைவெளியிலும் வீரர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படும் - இந்திய கிரிக்கெட் வாரியம்

By: Karunakaran Wed, 05 Aug 2020 5:22:29 PM

ஒவ்வொரு 5 நாட்கள் இடைவெளியிலும் வீரர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படும் - இந்திய கிரிக்கெட் வாரியம்

8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டிக்கு தொடர்புடையவர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை இந்திய கிரிக்கெட் வாரியம் தயாரித்துள்ளது. இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஐ.பி.எல். அணிகளில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர்கள், உதவியாளர்கள் ஒரு வாரத்திற்கு முன்பாக 24 மணி நேரத்திற்குள் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

corona testing,players,5 days,board of control for cricket in india ,கொரோனா சோதனை, வீரர்கள், 5 நாட்கள், இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்

முதற்கட்ட சோதனையில் எந்த வீரருக்காவது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த வீரர் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார். பிறகு 24 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என்பதை குறிகும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தால் அந்த வீரர் அமீரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஐ.பி.எல். போட்டி தொடங்கியதும் ஒவ்வொரு 5 நாட்கள் இடைவெளியிலும் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா சோதனை நடத்தப்படும். வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள், மற்றும் பயிற்சியாளர்களை பொறுத்தமட்டில் அமீரகம் புறப்படுவதற்கு முன்பாக இரண்டு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். கொரோனா தொற்று இருந்தால் 14 நாட்கள் தனிமை, அதன் பிறகு மேலும் இரண்டு முறை பரிசோதனை போன்ற நடைமுறை அவர்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார்.

Tags :
|