Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ராயல் சேலஞ்சர் அணி வீரர்களுடன் விராட்கோலி காணொலியில் ஆலோசனை

ராயல் சேலஞ்சர் அணி வீரர்களுடன் விராட்கோலி காணொலியில் ஆலோசனை

By: Nagaraj Thu, 27 Aug 2020 08:12:53 AM

ராயல் சேலஞ்சர் அணி வீரர்களுடன் விராட்கோலி காணொலியில் ஆலோசனை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

13 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியானது மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் போட்டியானது செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி துவங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் துபாய் சென்று தங்களைத் தாங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

bio bubble method,players,video,advice,virat kohli ,
பயோ பபுள் முறை, வீரர்கள், காணொலி, ஆலோசனை, விராட் கோலி

விராட் கோலி கூறும்போது, “பயோ பபுள் முறையில் நாம் பாதுகாப்பாக போட்டியில் பங்கேற்றல் வேண்டும், எந்தவொரு சூழ்நிலையிலும் பாதுகாப்பு வளையத்தினை மீறக் கூடாது.

மேலும் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் சமரசம் என்ற பேச்சே கிடையாது, ஏனெனில் ஒருவர் செய்யும் தவறு நிச்சயம் போட்டியின் சூழ்நிலையினை மாற்றிவிடும்.

ஒரு வீரர் அஜாக்கிரதையாக இருக்கும்பட்சத்தில், மற்ற வீரர்களுக்கு எளிதில் பரவிவிடும், மேலும் அதனால் அவ்வீரர் போட்டியில் இருந்து விலகினால் வெற்றிக் கனியை நம்மால் எட்ட முடிவது கடினமாகிவிடும். அதனால் நாம் பயோ பபுள் முறையினைத் தீவிரமான முறையில் கடைபிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Tags :
|
|