Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக்காக விக்கெட் கீப்பர் பணியையும் கவனிக்கும் டி வில்லியர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக்காக விக்கெட் கீப்பர் பணியையும் கவனிக்கும் டி வில்லியர்ஸ்

By: Karunakaran Tue, 29 Sept 2020 5:26:42 PM

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக்காக விக்கெட் கீப்பர் பணியையும் கவனிக்கும் டி வில்லியர்ஸ்

13-வது ஐபில் போட்டியில் ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 201 ரன்கள் சேர்த்தது. பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியனஸ் களம் இங்கியது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் 201 ரன்களே அடித்ததால் போட்டி டையில் முடிந்தது. சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 7 ரன்கள் அடித்தது.

பின்னர் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. பும்ரா அந்த ஓவரை வீசினார். முதல் மூன்று பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 3-வது பந்தை டி வில்லியர்ஸ் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் ஒரு ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் விராட் கோலி பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

de villiers,wicket-keeper,royal challengers,victory ,டிவில்லியர்ஸ், விக்கெட் கீப்பர், ராயல் சேலஞ்சர்ஸ், வெற்றி

ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ், விக்கெட் கீப்பராக பணியாற்றுவது இல்லை. பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார். ஆனால் தற்போது பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஆர்சிபி அணி சற்று தடுமாற்றம் அடைந்து வருவதால் விக்கெட் கீப்பர் பணியையும் சேர்ந்து கவனிக்க தொடங்கி உள்ளார்.

நேற்று மும்பை அணிக்கு எதிராக விக்கெட் கீப்பராக பணியாற்றினார். சூர்யகுமார் யாதவை சிறப்பாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். விக்கெட் கீப்பராக பணியாற்றுவதால் டி வில்லியர்ஸ் ஆர்.சி.பி. அணிக்கு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் களமிறங்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். நேற்றை மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக டி வில்லியர்ஸ் இருந்தார்.

Tags :