Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இன்றைய போட்டியில் 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

இன்றைய போட்டியில் 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

By: Nagaraj Fri, 09 Oct 2020 10:03:04 PM

இன்றைய போட்டியில் 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 184 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 185 ரன்கள் வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்குகிறது.

ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

இதனால் முதல் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க வீரர் தவான் 5 (4) ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பிருத்வி ஷா 19 (10) ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 22 (18) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ரிஷாப் பண்ட் 5 (9) ரன்களில் நடையைக் கட்டினார்.

delhi team,rajasthan,field,185 runs,ipl. ,டெல்லி அணி, ராஜஸ்தான், களம், 185 ரன்கள், ஐ.பி.எல்.

இருப்பினும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்டொயினிஸ் 39 (30) ரன்களிலும் மற்றும் சிம்ரான் ஹெட்மெயர் 45 (24) ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். தடுமாற்றமாக இருந்தாலும் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து வெற்றிக்கு 185 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் களம் இறங்குகிறது.

Tags :
|