Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் ஜனவரி 4-ந்தேதி வரை மெல்போர்னில் நகரில்தான் இருப்பார்கள் என தகவல்

இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் ஜனவரி 4-ந்தேதி வரை மெல்போர்னில் நகரில்தான் இருப்பார்கள் என தகவல்

By: Karunakaran Wed, 30 Dec 2020 11:55:18 PM

இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் ஜனவரி 4-ந்தேதி வரை மெல்போர்னில் நகரில்தான் இருப்பார்கள் என தகவல்

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. தற்போது சிட்னியில் கொரோனா வைரஸ் தொற்றில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்ற யூகச் செய்திகள் வெளியாகின.

ஆனால் திட்டமிட்டபடி சிட்னியில்தான் 3-வது டெஸ்ட் நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. மெல்போர்ன் டெஸ்ட் நேற்றுடன் முடிவடைந்தது. இந்திய அணி வீரர்கள் நாளை மெல்போர்னில் இருந்து சிட்னி செல்வதாக இருந்தது.

india,australia,melbourne,january 4 ,இந்தியா, ஆஸ்திரேலியா, மெல்போர்ன், ஜனவரி 4

ஆனால் சிட்னியில் கொரோனா தொற்று இருப்பதால் ஜனவரி 4-ந்தேதி வரை சிட்னி செல்ல வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மெல்போர்ன் நகரிலேயே தங்கியிருந்து, பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய வீரர்களும் மெல்போர்னில்தான் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள்.

சிட்னியில் இரண்டு நாட்கள் மட்டுமே பயற்சி மேற்கொண்டு நேரடியாக போட்டிக்கு செல்ல இருக்கிறார்கள். இதனால் சிட்னியில்தான் 3-வது போட்டி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும், இரு அணி வீரர்களும் ஜனவரி 4-ந்தேதி வரை மெல்போர்னில் நகரில்தான் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|