Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோ கொரோனாவால் பாதிப்பு

போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோ கொரோனாவால் பாதிப்பு

By: Karunakaran Wed, 14 Oct 2020 12:48:08 PM

போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோ கொரோனாவால் பாதிப்பு

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக உள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் சிறந்த வீரர் விருதை 5 முறை வென்றுள்ளார். தற்போது, கிறிஸ்டியானோ ரொனால்டோ நேஷன்ஸ் லீக் போட்டியில் விளையாடி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில் 35 வயதான ரொனால்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை. இதனால், அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் ரொனால்டோ தன்னைத்தானே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

injury,portuguese footballer,ronaldo,corona virus ,காயம், போர்த்துகீசிய கால்பந்து வீரர், ரொனால்டோ, கொரோனா வைரஸ்

ரொனால்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை போர்ச்சுக்கல் கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று நடைபெறும் சுவீடனுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரொனால்டோ விளையாடமாட்டார் போர்ச்சுக்கல் கால்பந்து சங்கம் கூறியுள்ளது. இது அணிக்கு பெரிய இழப்பாகும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவர், யுவென்டஸ் கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்நிலையில், ரொனால்டோ அடுத்து வரும் அந்த அணியின் லீக் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. இதனால், போர்ச்சுக்கல் அணிக்கு மட்டுமின்றி யுவென்டஸ் கிளப் அணிக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
|