Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நேற்றை ஆட்டத்தில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததில் உள்ள சுவாரஸ்யமான கதை

நேற்றை ஆட்டத்தில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததில் உள்ள சுவாரஸ்யமான கதை

By: Karunakaran Thu, 08 Oct 2020 5:26:42 PM

நேற்றை ஆட்டத்தில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததில் உள்ள சுவாரஸ்யமான கதை

130-வது ஐபிஎல் போட்டி அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 21-வது லீக் ஆட்டம் நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பொதுவாக ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இதனால் ஆடுகளத்தின் தன்மையை பெரிதாக கருதாமல் டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும்.

துபாயில் பல போட்டிகளில் டாஸ் வென்ற அணிகள் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 180 ரன்களுக்கு மேல் ரன்கள் அடித்ததால் டாஸ் வென்ற அணிகளால் சேஸிங் செய்ய இயலாமல் போனது. அபு தாபியில் 170 ரன்கள் அடித்தாலே சேஸிங் செய்ய கடினம் என்பதால் டாஸ் வெல்லும் அணிகள் பேட்டிங்கை தேர்வு செய்கின்றன.

chennai team,kolkata team,batting,ipl2020 ,சென்னை அணி, கொல்கத்தா அணி, பேட்டிங், ஐபிஎல் 2020

இந்நிலையில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். பொதுவாக கொல்கத்தா அணி டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்வது கிடையாது. சேஸிங் செய்யவே விரும்பும். ஆனால் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கை முதலில் தேர்ந்தெடுத்துள்ளது.

இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு நடைபெற்ற சீசனில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்திருந்தது. அதன்பின் தற்போது நேற்று ஐந்து ஆண்டுகள் கழித்து 69 போட்டிகளுக்குப் பிறகு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

Tags :