Advertisement

ஐ.பி.எல். போட்டியில் இருந்து சென்னை அணி பிராவோ விலகல்

By: Nagaraj Wed, 21 Oct 2020 8:34:10 PM

ஐ.பி.எல். போட்டியில் இருந்து சென்னை அணி பிராவோ விலகல்

பிராவோ காயம் காரணமாக விலகல்... ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சென்னை அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 3 வெற்றியும், 7 தோல்வியையும் சந்தித்துள்ளது. இதன்மூலம், அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மங்கிப் போய் விட்டது. இருப்பினும், இனி வரும் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றாலும், பிற அணிகளின் முடிவை பொறுத்தே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும்.

சென்னை அணியின் இந்தத் தோல்விகளுக்கு நட்சத்திர வீரர் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் இல்லாதது ஒருபுறம் இருந்தாலும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல், வயது அதிகமுள்ள வீரர்களை வைத்து தொடர்ந்து விளையாடியதே காரணமாக கூறப்படுகிறது.

ipl,chennai team,bravo,injury,dislocation ,ஐபிஎல், சென்னை அணி, பிராவோ, காயம், விலகல்

சென்னை அணிக்கு உள்ள எஞ்சிய 4 போட்டிகளிலாவது வெற்றி பெறுமா..? என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் நிலையில், ஆல் ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, நடப்பு சீசன் தொடங்கிய போது, காயம் காரணமாக முதல் 4 போட்டிகளில் விளையாடாத பிராவோ, சென்னை அணிக்காக வெறும் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|