Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகினார் சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா

ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகினார் சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா

By: Nagaraj Sat, 29 Aug 2020 5:15:11 PM

ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகினார் சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா

ஐபிஎல் போட்டியிலிருந்து சிஎஸ்கே அணியின் பிரபல வீரர் சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இதனால் ரசிகர்கள் சற்றே உற்சாகம் இழந்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

chennai team,suresh raina,corona,information ,சென்னை அணி, சுரேஷ் ரெய்னா, கொரோனா, தகவல்கள்

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இத்தகவலை சிஎஸ்கே அணி தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். சொந்தக் காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். இதனால் ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இந்தச் சமயத்தில் ரெய்னாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சிஎஸ்கே நிர்வாகம் முழுமையான ஆதரவை வழங்குகிறது என்று அவர் கூறியுள்ளார்.

துபைக்கு ஆகஸ்ட் 21 அன்று வந்த சிஎஸ்கே அணி, தங்கள் தனிமைப்படுத்துதல் காலத்தைத் திடீரென நீட்டித்துள்ளது. நேற்று முதல் பயிற்சியை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 முதல் பயிற்சியை ஆரம்பிக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. துபை நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் துபையில் உள்ள சிஎஸ்கே உறுப்பினர்கள் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags :
|