Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கோவாவில் இன்று தொடங்கும் ஐ.எஸ்.எல். போட்டியில் கொல்கத்தா- கேரளா அணிகள் மோதல்

கோவாவில் இன்று தொடங்கும் ஐ.எஸ்.எல். போட்டியில் கொல்கத்தா- கேரளா அணிகள் மோதல்

By: Nagaraj Fri, 20 Nov 2020 09:09:27 AM

கோவாவில் இன்று தொடங்கும் ஐ.எஸ்.எல். போட்டியில் கொல்கத்தா- கேரளா அணிகள் மோதல்

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இன்று கோவாவில் தொடங்குகிறது. இதில் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - கேரளா அணிகள் மோதுகின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் 7-வது சீசன் கோவாவில் இன்று தொடங்குகிறது. வரும் மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டித் தொடரில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவாவில் ரசிகர்கள் இன்றி அரங்கேறுகிறது.

football match,first match,kolkata,kerala teams,clash ,கால்பந்து போட்டி, முதல் ஆட்டம், கொல்கத்தா, கேரளா அணிகள், மோதல்

11 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.இந்த தொடரில் மொத்தம் 115 ஆட்டங்கள் இடம் பெறுகிறது. இது கடந்த ஆண்டை விட 20 ஆட்டங்கள் அதிகமாகும்.

இதில் ஜனவரி 11-ந் தேதி வரையிலான லீக் ஆட்ட அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்சை பாம்போலிம்மில் உள்ள ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

Tags :