Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்க முடியாதது ஏமாற்றமே - பெங்களூர் அணி கேப்டன் விராட்

புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்க முடியாதது ஏமாற்றமே - பெங்களூர் அணி கேப்டன் விராட்

By: Karunakaran Tue, 03 Nov 2020 5:54:36 PM

புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்க முடியாதது ஏமாற்றமே - பெங்களூர் அணி கேப்டன் விராட்

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியை மீண்டும் வீழ்த்தி டெல்லி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. நேற்று நடந்த 55-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுக்க முடிந்தது. பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றி மூலம் டெல்லி அணி 16 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி பெங்களூரை மீண்டும் வீழ்த்தியது.டெல்லி குவாலிபையர்-1 ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. இந்த வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், இந்த ஆட்டம் எங்களுக்கு வாழ்வா? சாவா? என்பதாகும். நாங்கள் வெற்றி பெறுவதில் தான் கவனம் செலுத்தினோம். ரன் ரேட் பற்றி சிந்திக்கவில்லை என்று கூறினார்.

disappointing,points table,bangalore team,virat ,ஏமாற்றம், புள்ளிகள் அட்டவணை, பெங்களூர் அணி, விராட்

இந்த போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை தழுவினாலும் பிளேஆப் சுற்று வாய்ப்பை பெற்றது. டெல்லி அணி 17.3 ஓவருக்கு இலக்கை எட்டி இருந்தால் அந்த அணி இன்றைய ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். பெங்களூர் அணி டெல்லியிடம் மீண்டும் தோற்றதால் 2-வது இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் அந்த அணி கேப்டன் விராட் கோலி ஏமாற்றம் அடைந்தார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், இந்த ஆட்டத்தின் முடிவு இரண்டுவிதமான உணர்வை தருகிறது. பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் 2-வது இடத்தை பிடிக்கமுடியாமல் போனது சற்று ஏமாற்றமே. மிடில் ஓவரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இறுதிப்போட்டியில் நுழைய தற்போது 2 ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags :