Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது இதய துடிப்பு புதிய உச்சத்துக்கு எகிறுகிறது; பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல்

ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது இதய துடிப்பு புதிய உச்சத்துக்கு எகிறுகிறது; பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல்

By: Monisha Thu, 22 Oct 2020 08:59:08 AM

ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது இதய துடிப்பு புதிய உச்சத்துக்கு எகிறுகிறது; பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் புள்ளி பட்டியலில் முன்னணியில் உள்ள டெல்லி கேப்பிட்டல்சுக்கு அதிர்ச்சி அளித்து 4-வது வெற்றியை பெற்றது.

இதில் டெல்லி அணி நிர்ணயித்த 165 ரன் இலக்கை பஞ்சாப் அணி 19 ஓவர்களில் எட்டிப்பிடித்து முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. நிகோலஸ் பூரன் அரைசதம் அடித்து (6 பவுண்டரி, 3 சிக்சருடன் 53 ரன்) வெற்றிக்கு உதவினார். 106 ரன்கள் குவித்த டெல்லி வீரர் ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:- "எங்கள் அணியின் ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது இதய துடிப்பு புதிய உச்சத்துக்கு எகிறுகிறது. இந்த ஆட்டத்தை 19-வது ஓவரிலேயே வெற்றிகரமாக முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

ipl,cricket,kings xi punjab,lokesh rahul,delhi capitals ,ஐ.பி.எல்,கிரிக்கெட்,கிங்ஸ் லெவன் பஞ்சாப்,லோகேஷ் ராகுல்,டெல்லி கேப்பிட்டல்ஸ்

மும்பை அணிக்கு எதிராக இரண்டு சூப்பர் ஓவர் முடிவில் கிடைத்த வெற்றிக்கு பிறகு அன்றையதினம் இரவில் நீண்ட நேரம் தூங்கவில்லை. இந்த பரபரப்பு, நெருக்கடியான சூழலுக்கு முன்பே அதாவது சூப்பர் ஓவருக்கு முன்னதாகவே எப்படி போட்டியை முடித்து இருக்க வேண்டும் என்பது குறித்து அதிகமாக சிந்தித்தேன்.

இந்த ஆட்டத்தில் 6 பேட்ஸ்மேன் மற்றும் ஒரு ஆல்-ரவுண்டருடன் ஆடியது போட்டியை விரைவாக முடிக்க உதவியதாக நினைக்கிறேன். ஒவ்வொரு அணியும், நிலைத்து நின்று ஆடும் பேட்ஸ்மேன் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த விஷயத்தை நாங்கள் சரிசெய்ய வேண்டும். சீனியர் வீரரான முகமது ஷமி ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். மேக்ஸ்வெல் நன்றாக பேட்டிங் செய்தார். அவருக்கு நாங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அடுத்து வரும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

Tags :
|