Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி

By: Karunakaran Fri, 16 Oct 2020 11:56:24 AM

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி

ஷார்ஜாவில் ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணியும், ஆர்சிபி அணியும் மோதின. பஞ்சாப் அணிக்கெதிராக டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி அதிரடியை தொடங்க ஆரம்பித்தனர். தேவ்தத் 12 பந்தில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பவர் பிளேயில் ஆர்சிபி 1 விக்கட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. பிஞ்ச் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிவம் டுபே 23 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி அதே ஓவரில் 48 ரன்னில் வெறியேறினார். ஆர்சிபி 18 ஓவர் முடிவில் 137 ரன்களே எடுத்திருந்தது,

punjab team,8 wickets,bangalore team,ipl 2020 ,பஞ்சாப் அணி, 8 விக்கெட்டுகள், பெங்களூர் அணி, ஐ.பி.எல் 2020

19-வது ஓவரில் 10 ரன்களும், கடைசி ஓவரில் 24 ரன்களும் என 12 பந்தில் 34 ரன்கள் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 171 ரன்கள் அடித்தது. அதன்பின், 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. கே எல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ராகுலுடன் கிறிஸ் கெயில் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர். இறுதி கட்டத்தில் 53 ரன் எடுத்த நிலையில் கெயில் அவுட்டானார். முடிவில், ஆட்டத்தின் கடைசி பந்தில் பஞ்சாப் அணி வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் 61 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

Tags :