Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்திய 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் - முன்னாள் வீரர்கள்

இந்திய 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் - முன்னாள் வீரர்கள்

By: Karunakaran Thu, 12 Nov 2020 12:23:19 PM

இந்திய 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் - முன்னாள் வீரர்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5-வது முறையாக கோப்பையை ரோகித் சர்மா வென்றுத்தந்துள்ளார். இதற்குப்பின், அவரது பதற்றமில்லா சாதுர்யமான கேப்டன்ஷிப் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக 2 முறை கோப்பையை கைப்பற்றியவருமான கவுதம் கம்பீர் கூறுகையில், ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இல்லாவிட்டால் அது இந்திய அணிக்கு இழப்பே தவிர, அவருக்கு அல்ல என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், சிறந்த அணியை பெற்றால் தான் ஒரு கேப்டனால் சாதிக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஒருவர் நல்ல கேப்டனா? இல்லையா? என்பதை எதை வைத்து மதிப்பிடுவது? இதற்கான அளவுகோலும், திறன்மதிப்பீடும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தனது தலைமையில் 5 கோப்பைகளை வென்றுள்ளார் என்று தெரிவித்தார்.

rohit sharma,captain,indian team,ipl 2020 ,ரோஹித் சர்மா, கேப்டன், இந்திய அணி, ஐபிஎல் 2020

டோனியை ஏன் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என்று சொல்கிறோம். அவர் இரண்டு உலக கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அத்துடன் 3 ஐ.பி.எல். கோப்பைகளையும் வென்று சாதித்துள்ளார். இதே போல் ரோகித் சர்மா ஐ.பி.எல். வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக விளங்குகிறார். எனவே குறுகிய வடிவிலான போட்டிக்கான இந்திய அணிக்கோ, குறைந்தது 20 ஓவர் போட்டிக்கான அணிக்கோ அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும். இது நடக்காவிட்டால் உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானதாக இருக்கும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஒருவர் 5 முறை ஐ.பி.எல். கோப்பைகளை வசப்படுத்தியுள்ளார். இன்னொருவர் இன்னும் ஒரு தடவை கூட கோப்பையை வெல்லவில்லை. அதற்காக கோலியை மோசமான கேப்டன் என்று நான் சொல்லவில்லை. இருவரும் ஒரே சமயத்தில் தான் ஐ.பி.எல். அணிகளின் கேப்டனாக பொறுப்பேற்றனர். இதில் ரோகித் சர்மா தன்னை சிறந்த கேப்டனாக நிரூபித்துள்ளார் என கம்பீர் கூறினார். இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், கேள்விக்கே இடமின்றி, இந்திய 20 ஓவர் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :