Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ரோகித் சர்மாவுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது தான் முக்கியமா? - முன்னாள் கேப்டன் கேள்வி

ரோகித் சர்மாவுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது தான் முக்கியமா? - முன்னாள் கேப்டன் கேள்வி

By: Karunakaran Thu, 05 Nov 2020 3:11:15 PM

ரோகித் சர்மாவுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது தான் முக்கியமா? - முன்னாள் கேப்டன் கேள்வி

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித் சர்மா, ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். இந்த ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மாவுக்கு தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் 4 போட்டிகளில் அவர் ஆடவில்லை. இதனால் இந்திய அணியின் துணை கேப்டனான ரோகித் சர்மா ஆஸ்திரேலிய பயணத்தில் தேர்வு செய்யப்படவில்லை. காயம் சரியாக சில வாரங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அதன்பின், ரோகித் சர்மா கவனமாக இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கூறி இருந்தனர். இந்நிலையில், ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களம் இறங்கினார். இது அவரது காயம் மேலும் சந்தேகத்தை கிளப்பியது.

rohit sharma,ipl,tournament,former captain ,ரோஹித் சர்மா, ஐபிஎல், போட்டி, முன்னாள் கேப்டன்


இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியை விட ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது தான் முக்கியமா? என்று முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், ரோகித் சர்மா விவகாரம் புதிராக உள்ளது. இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேனான அவர் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கும் அளவுக்கு உடல் தகுதியுடன் இல்லை என்று கிரிக்கெட் வாரிய பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் சான்று அளித்துள்ளார். ஆனால் அடுத்த சில நாட்களில் அவர் மும்பை அணியின் கேப்டனாக களம் இறங்குகிறார் என்று கூறினார்.

மேலும் அவர், ரோகித் சர்மாவுக்கு நாட்டை விட ஐ.பி.எல்.தான் முக்கியமாக தெரிகிறது. இந்திய அணிக்கு ஆடுவதைவிட ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதையே விரும்புகிறார். இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியம் தீர்வு காணவேண்டும். ரோகித் சர்மா காயம் குறித்து நிதின் படேல் தவறான தகவல் கொடுத்தாரா? என்பது தெரியவேண்டும் என கூறினார்.


Tags :
|