Advertisement

ரோகித் சர்மா நாளை இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைய உள்ளார்

By: Karunakaran Tue, 29 Dec 2020 4:32:08 PM

ரோகித் சர்மா நாளை இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைய உள்ளார்

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 70 ரன்கள் இலக்கை 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இலங்கை எட்டி, இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் அதிரடி தொடக்க பேட்ஸ்மேனான ரோகித் சர்மா காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. 3-வது போட்டியில் விளையாட உடற்தகுதி பெற்றதால் கடந்த 16-ந்தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்தார். அன்றைய தினத்தில் இருந்து 14 நாட்கள் கோரன்டைனில் இருக்கிறது.

rohit sharma,indian cricket team,australia,test match ,ரோஹித் சர்மா, இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா, டெஸ்ட் போட்டி

14 நாட்கள் முடிவடைந்ததையொட்டி நாளை மெல்போர்னில் இருக்கும் இந்திய அணியுடன் ரோகித் சர்மா இணைகிறார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் மெல்போர்னிலேயே 3-வது போட்டி நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் மெல்போர்ன் வந்து அணியுடன் இணைகிறார். 3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7-ந்தேதி சிட்னியில் நடைபெற இருக்கிறது. இன்றைய போட்டி முடிந்த பின்னர் இந்திய அணி கேப்டன் ரஹானே இதுகுறித்து கூறுகையில், ரோகித் சர்மா அணியில் இணைய இருப்பது குறித்து ஆர்வமாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Tags :