Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்

By: Karunakaran Tue, 04 Aug 2020 5:33:52 PM

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்

கொரோனா வைரஸ் பரவலுக்கு பின், கடந்த மாதம் 8-ந்தேதி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கடந்த ஒரு வாரங்களுக்கு முன், இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்தது.

தற்போது, இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மான்செஸ்டரில் நாளை தொடங்கவுள்ளது. இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் வலுவானது. அங்குள்ள சீதோஷ்ணநிலை பந்து ஸ்விங் ஆக சாதகமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடுவது பாகிஸ்தான் அணிக்கு கடினம்.

three-match,test series,england,pakistan ,மூன்று போட்டிகள், டெஸ்ட் தொடர், இங்கிலாந்து, பாகிஸ்தான்

இங்கிலாந்து மண்ணில் வெளிநாட்டு அணி தொடரை வெல்வது மிகச்சிறப்பாக இருக்கும். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் வலுவாக இருப்பதால், அந்த அணியால் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட முடியும். பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜாஃப்ரா ஆர்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சிறப்பாக இருப்பதால் இங்கிலாந்து அணி வலுவுடன் உள்ளது.

கடந்த 10 தொடர்களில் 8-ல் முதல் போட்டியை இங்கிலாந்து தோல்வியடைந்துள்ளது. இதனால் தொடரை வெற்றியோடு ஆரம்பிக்க இங்கிலாந்து முயற்சி செய்யும். பாகிஸ்தான் அணி கடந்த இரண்டு முறை இங்கிலாந்து சென்றிருந்தபோது தொடரை டிரா செய்துள்ள நம்பிக்கையில் களம் இறங்கும். பாகிஸ்தான் பேட்டிங்கில் கேப்டன் அசார் அலி, இளம் வீரர் பாபர் அசாம் உள்ளனர்.

Tags :