- வீடு›
- விளையாட்டு›
- நம் இதயத்தில் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்; தோனி மனைவியின் கருத்து
நம் இதயத்தில் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்; தோனி மனைவியின் கருத்து
By: Nagaraj Mon, 26 Oct 2020 1:28:07 PM
தோல்வி அடைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் இதயத்தில் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள் என்று தோனியின் மனைவி சாக்சி தோனி கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்ற போதிலும் நேற்றைய இன்னொரு போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை சென்னை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் இனிவரும் அடுத்து வரும் இரண்டு போட்டிகளும் போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த ஆண்டுக்கான பயிற்சி போட்டியாக எடுத்துக் கொள்வோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கூறியிருந்தார் என்பது தெரிந்ததே.
அதுமட்டுமின்றி நேற்றைய போட்டியில் அபாரமாக அரைசதமடித்த ருத்ராஜ்
கெய்க்வாட் என்ற அபாரமான பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு எதிர்காலத்தில்
கிடைக்கவும் நேற்றைய போட்டி ஒரு வாய்ப்பாக அமைந்தது.
இந்த நிலையில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி குறித்து தோனியின் மனைவி சாக்சி தோனி
கூறியபோது 'இது ஒரு விளையாட்டு. யாரும் தோற்றுப்போக விரும்ப மாட்டார்கள்.
ஆனால் அனைவரும் வெற்றியாளர்கள் ஆகவே இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும்
தோல்வி அடைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் இதயத்தில் சூப்பர் கிங்ஸ்களாக
இருப்பார்கள் என்று தோனியின் மனைவி சாக்சி தோனி கூறியுள்ளார். சாக்சி
தோனியின் இந்த சமூக வலைதள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.