Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • பழங்கால கோவில்களுக்கு பெயர்பெற்ற கரூர்... பக்தியுடன் ஒரு சுற்றுலா!

பழங்கால கோவில்களுக்கு பெயர்பெற்ற கரூர்... பக்தியுடன் ஒரு சுற்றுலா!

By: Monisha Mon, 12 Oct 2020 1:18:29 PM

பழங்கால கோவில்களுக்கு பெயர்பெற்ற கரூர்... பக்தியுடன் ஒரு சுற்றுலா!

தமிழ்நாட்டின் எழில் கொஞ்சும் அமராவதி ஆற்றங்கரையில், தென்கிழக்கே 60 கி.மீ. தொலைவில் ஈரோடு, மேற்கில் 70 கி.மீ. தொலைவில் திருச்சி, தெற்கில் 100 கி.மீ. தொலைவில் சேலம், வடக்கே 150 கி.மீ. தொலைவில் மதுரை மற்றும் கிழக்கே 140 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் சூழ்ந்திருக்க கரூர் நகரம் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. 1995ல் திருச்சிராப்பள்ளியில் பிரிக்கப்பட்டு கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. காவேரி, அமராவதி, நல்காசி, குடகனார் மற்றும் நொய்யல் போன்ற பல நதிகள் இந்த மாவட்டத்தில் பாய்ந்து செல்கின்றன.

கரூர் மற்றும் அதை சுற்றி இருக்கும் சுற்றுலா தலங்கள்
எண்ணற்ற பழங்கால கோவில்களுக்கு கரூர் பெயர்பெற்றது. இப்பட்டணம் ஏழு புனித சிவாலயங்களுள் ஒன்று. ஐந்தி அடி உயர லிங்கம் உடைய பசுபதீஸ்வரலிங்கம் கோவில் இப்பட்டணத்தின் மிகவும் புகழ்பெற்ற கோவில் ஆகும். புகழிமலை ஸ்ரீ ஆறுபடை முருகன் கோவில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், ஸ்ரீ கரூவூர் மாரியம்மன் கோவில், நேரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் கோவில், ஸ்ரீ சிர்டி சார் பாபா கோவில், ஸ்ரீ சோலையம்மன் கோவில், ஸ்ரீ மஹா காளியம்மன் கோவில், ஸ்ரீ வங்காளம்மன் கோவில், கல்யாண வெங்கடரமனா ஸ்வாமி கோவில், ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், சதாசிவா கோவில், அக்னீஷ்வரர் கோவில் ஆகியவை இங்குள்ள மற்ற புகழ்பெற்ற கோவில்கள்.

temples,tourist places,karur,shiva temples,amravati river ,கோவில்கள்,சுற்றுலா தலங்கள்,கரூர்,சிவாலயங்கள்,அமராவதி ஆறு

கரூரை அடைவது எப்படி?
கரூருக்கு நெருக்கமான உள்நாட்டு விமானநிலையங்கள் திருச்சியிலும், கோயம்புத்தூரிலும் இருக்கின்றன. அருகாமையில் இருக்கும் சர்வதேச விமான நிலையம் சென்னையில் இருக்கிறது. நகரத்தின் மையத்தில் இருக்கும் கரூர் ரயில் நிலையம் தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளோடு நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கரூருக்கு தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே, கரூர் தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து எளிதாக அணுகக்கூடியதாக இருக்கின்றது.

வானிலை
கரூரில் கோடைக்காலம் முகவும் வெப்பமாகவும், குளிர்க்காலம் மிதமாகவும், இனிமையாகவும் இருக்கின்றது. மழைக்காலத்தில், கரூர் மிதமான மழைப்பொழிவைப் பெறுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை நிலவும் குளிர்க்காலமே, இப்பட்டணத்திற்கு பயணிக்க சிறந்த காலம் ஆகும்.

Tags :
|