பிரமோற்சவ 6ம் நாளில் ராம அவதாரத்தில் சுவாமி எழுந்தருளல்

ராம அவதாரம்... திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 6-ம் நாளான இன்று அனுமந்த வாகனத்தில் ராம அவதாரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

கல்யாண உற்சவ மண்டபத்தில் ஜீயர்கள் பிரபந்த பாராயணங்கள் பாடி, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க அனுமந்த வாகனத்தில் ராமாவதாரத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். தொடர்ந்து அர்ச்சகர்கள் தீபாராதனை காட்டி வழிபட்டனர்.

முன்னதாக, கருட சேவையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் ஏழுமலையானை தரிசனம் செய்து, கர்நாடக மாநில பக்தர்களுக்கு 200 கோடி ரூபாய் மதிப்பில் திருமலையில் சத்திரம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைத்தனர்.