முகத்தை எளிமையாக இயற்கை முறையில் அழகாக்கும் வழிமுறை

சென்னை: இயற்கை முறையில் முகத்தை அழகாக மாற்றும் வழி... பண செலவில்லாமல் இயற்கையான முறையில் எளிமையாக முகத்தை எப்படி அழகாக மாற்றுவது என்று தெரிந்து கொள்வோம்.

தேவையானப் பொருள்கள்
தக்காளி - 1மஞ்சள் - 1 தேக்கரண்டிசீனி - சிறிதளவுஎலுமிச்சை பழம் - 1

செய்முறை: முதலில் தக்காளி பழத்தை நேராக கட் பண்ணி அதில் பாதி பழத்தை எடுத்து நாம் எடுத்து வைத்திருக்கும் மஞ்சளில் கட் பண்ணி வைத்திருக்கும் பகுதி படுமாறு நன்கு முக்கி எடுத்து அதை உங்கள் முகத்தில் வட்டமாக தடவுங்கள்.

இதை கண் கருவளையங்கள் இருக்கும் இடங்களிலும் நன்கு தடவுங்கள். இப்படி 10 நிமிடங்களுக்கு மென்மையாக தடவுங்கள். இப்படி நீங்கள் 10 நிமிடங்கள் செய்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் நன்கு கழுவுங்கள். அதன்பின் ஒரு பவுலில் சிறிதளவு சீனி எடுத்து அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடுங்கள்.

அதன்பின் மீதம் இருக்கும் பாதி தக்காளி பழத்தை எடுத்து அதை இந்த சீனியில் நன்கு படுமாறு முக்கி எடுத்து நாம் முதலில் செய்தது போல உங்கள் முகத்தில் வட்டமாக தடவுங்கள். இப்படி நாம் 10 நிமிடங்கள் செய்யும் போது முகத்தில் காணப்படும் முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் மறைந்து முகம் மென்மையாகவும் பளப்பளப்பாகவும் மாறும். மேலும் முதலில் நாம் உபயோகப்படுத்தின மஞ்சள் முகத்தில் படித்திருந்தாலும் அதுவும் மறைந்து விடும்.

இப்படி நீங்கள் வாரத்தில் மூன்று நாள்கள் செய்து பாருங்கள் நல்ல மாற்றத்தை பார்க்க முடியும்.