கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாகும் கேரட் ஆயில்

கூந்தல் வளர்ச்சியினை மேம்படுத்த உதவுகிறது கேரட் ஆயில். கேரட்டில் அதிக அளவில் வைட்டமின் ஈ சத்தானது உள்ளது, இந்த கேரட்டில் எண்ணெய் தயாரித்து தலைமுடிக்குப் பயன்படுத்தினால் நிச்சயம் கூந்தல் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும்.


தேவையானவை:

கேரட்- 2
தேங்காய் எண்ணெய்- 30 மில்லி
விளக்கெண்ணெய்- 30 மில்லி
நல்லெண்ணெய்- 30 மில்லி

செய்முறை: கேரட்டினை தோல்சீவி நன்கு துருவிக் கொள்ளவும். அடுத்து தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் ஒன்றாகக் கலந்து வாணலியில் ஊற்றி சூடு செய்யவும்.

அடுத்து இதில் துருவிய கேரட்டைக் கொட்டி, 15 நிமிடங்கள் காய்ச்சி இறக்கவும். இதனை வடிகட்டி தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் கூந்தல் வளர்ச்சியானது மேம்படும்.