பளபளக்கும், அழகு கூந்தலுக்கு தேங்காய்ப் பால் ஹேர்பேக்

நீளமான கூந்தலாக இருக்கும். ஆனால் அதில் ஒரு மினுமினுப்பு இருக்காது. வறண்டு போய் காணப்படும். இந்த பிரச்னை நிறைய பெண்களுக்கு உள்ளது. உங்கள் கூந்தல் ஷைனிங்காக இல்லாமல் வறட்சியாக இருக்கின்றதே என்ற வருத்தம் உள்ளதா?

இனி அது குறித்து இனி கவலை கொள்ளத் தேவையில்லை. நிச்சயம் அதற்கான தீர்வினைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

தேவையானவை:

தேங்காய்- அரை மூடி
பூசணி விதை- 2 ஸ்பூன்

செய்முறை: பூசணி விதையினை நன்கு தண்ணீரில் ஊறவைக்கவும்.
அடுத்து அரைத்த பூசணி விதையினை தேங்காய்ப் பாலில் ஊறவிட்டால் தேங்காய்ப் பால் ஹேர்பேக் ரெடி. இந்த தேங்காய்ப் பால் ஹேர்பேக்கினை தலைமுடியில் நன்கு வேர்க்கால்கள் வரை தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும்.

இப்போது தேங்காய்பாலின் சத்துக்கள் உங்கள் முடியில் பரவலாக கிடைக்கச் செய்யும். பின்னர் குளிர்ந்த நீரை கொண்டு கூந்தலை அலசவும். பின்னர் சீயக்காய் கொண்டு முடியினை அலசினால் தலைமுடியானது ஷைனிங்காக இருக்கும்.