கருமை சருமத்தால் பிரச்னையா... எளிமையான தீர்வு வழிமுறை உங்களுக்கு!

சென்னை: உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமம் உங்கள் முக சரும நிறத்தை சமமாக காட்டாது.இது உங்கள் முக அழகையே கெடுத்து விடும். இந்த பிரச்சினை உலகம் முழுவதும் உள்ள ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கின்றன.

இந்த பிரச்சினை ஏற்படக் காரணம், அதிகமான நிறமிகள் (ஹைபர் பிக்மன்டேஷன்), அழுக்குகள், நச்சுப் பொருட்கள், த்ரட்டனிங், வேக்சிங் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

எனவே இந்த பிரச்சினையால் நிறைய பேர் தங்களது முக சருமத்தால் கவலைப்படுகின்றனர். இதை மறைக்க கண்சீலர் போன்ற மேக்கப் பொருட்களை அவர்கள் நாடுகின்றனர். ஆனால் இந்த அழகு பொருட்கள் தற்காலிகமாக கருமையை மறைக்க மட்டுமே பயன்படுகின்றன.நிரந்தர ஒரு பயனை பெற வேண்டும் என்றால் அதற்கு நாம் இயற்கை பொருட்கள் மூலம் தீர்வு காண்பதே சிறப்பு.

உருளைக்கிழங்கு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. எனவே இந்த உருளைக்கிழங்கு நமது உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமத்தை எளிதாக நீக்கி விடுகிறது.


வேக வைக்காத உருளைக்கிழங்கை எடுத்து அதை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இப்பொழுது பாதிக்கப்பட்ட சரும பகுதியில் இந்த துண்டுகளை கொண்டு தேய்க்கவும். 15- 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பிறகு குளிர்ந்த மற்றும் சூடான நீர் கலந்த கலவையில் கழுவ வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.