முகம் பொலிவு பெற உதவுகிறது பாலாடை

சென்னை: முகம் பொன் நிறத்தைப் பெற, முகத்தில் பாலாடை தடவி வந்தால், பலன் அதிகம் கிடைக்கும். மேலும் பொலிவு பெற, இந்த பால் ஆடையில் சில பொருட்களைக் கலந்து முகத்தில் தடவினால் பலன் கிடைக்கும்.

உங்களுக்கு பாலாடை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது அதை முகத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்பது தான் மிகவும் முக்கியம். எனவே பால் ஆடையுடன் எதைக் கலந்த தடவினால் முகம் பளபளக்கும் என்பதை அறிவோம்.

முகம் பொலிவு பெற, 1 டீஸ்பூன் பால் ஆடையில், 1 டீஸ்பூன் கடலைமாவை கலக்க வேண்டும். இதை கலந்த பிறகு, இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் 20 நிமிடங்கள் தடவவும். இந்த பேஸ்ட்டினால் உங்களுக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும். இந்த பேஸ்ட் சருமத்தில் உள்ள கரும் புள்ளிகளை அகற்ற மிகவும் உதவியாக இருக்கும்.

பாலாடை சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதமாக்குகிறது. மேலும், தோலில் உள்ள அனைத்து டெட் செல்களையும் அகற்ற உதவுகிறது. இதைப் பயன்படுத்த, ஒரு ஸ்பூன் பாலாடை எடுத்து, லேசாக கைகளால் முகத்தில் தடவி குறைந்தது 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். இதுவும் உங்களுக்கு நிச்சயம் பலன் தரும். அதேபோல் உங்கள் சருமம் மிகவும் வறண்டு இருந்தால் நீங்கள் கட்டாயம் பாலாடை பயன்படுத்த வேண்டும்.

பாலாடையில் நிறைய கொழுப்பு உள்ளது. இது சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதமாக்க உதவுகிறது. இதனுடன், தோலில் உள்ள அனைத்து டெட் செல்களையும் அகற்ற உதவுகிறது. இதைப் பயன்படுத்த, நீங்கள் ஒரு ஸ்பூன் பாலாடை எடுத்து, லேசான கைகளால் முகத்தில் தடவி குறைந்தது 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.