இயற்கையான முறையில் சரும அழகை மெருகூட்ட..!

உங்கள் சரும அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க பயன்படும் பொருட்களில் ஒன்றுதான் ரோஸ் வாட்டர். இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் சரும பிரச்சனைகளை தீர்க்கிறது. இயற்கை மணம் நிறைந்த சந்தனம் அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இந்த இரண்டு பொருட்களை வைத்து எப்படி சரும அழகை மெருகூட்டலாம்.

தேவையானவை
சந்தன தூள்
ரோஸ் வாட்டர்

செய்முறை
முதலில் ஒரு பௌலில் சந்தன தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிதளவு ரோஸ் வட்டாரை கலந்து கொள்ள வேண்டும். இரண்டையும் நன்கு கலந்து பேஸ்ட் போல செய்துக் கொள்ள வேண்டும்.

பின், அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், சருமத்தில் அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பருக்களும் மறைந்து விடும். மேலும் இவ்வாறு செய்வதால் தணிந்து விடும்.