இனி பார்லரே வேண்டாம்... தர்பூசணி பேசியல் போதுமே!!!

சென்னை; இனிமேல் பார்லர் போக வேண்டாம். இயற்கையான புத்துணர்வை பெற வீட்டிலேயே தர்பூசணி பேசியல் செய்யலாம் வாருங்கள்.

தர்பூசணி இயற்கையான டோனராக செயல்படுகிறது. தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது சருமம் விரைவில் வயதான தோற்றத்தை தடுக்கவும் உதவுகின்றன. தர்பூசணிகளில் அதிக நீர் சத்து நிறைந்து இருப்பதால், வறண்ட சருமம் இருப்பவர்கள் முகத்திற்கு தர்பூசணி சாறு போடலாம். வீட்டிலேயே மிக மிக சுலபமாக தர்பூசணி பேசியல் செய்துகொள்ளலாம்.