முகத்தை அழகுபடுத்த உதவும் கடலை மாவு!

பெரும்பாலான பெண்கள் முகத்தை அழகுபடுத்த சமையல் அறையில் இருக்கும் பொருள்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த பொருட்களின் பட்டியலில் கடலை மாவு முதலிடத்தை பிடித்துள்ளது.

சாதாரண மக்கள் மட்டுமல்ல பிரபலங்களும் கூட, முகம் மற்றும் சருமத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வீட்டில் பேஸ் மாஸ்க் முயற்சித்து வருகின்றனர். இந்த பேஸ் மாஸ்க் எப்படி தயாரிப்பது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் வறண்ட சருமத்தை போக்க கடலைமாவு ஒரு சிறந்த பொருள். இதை செய்வதற்கு உங்களுக்கு தேவையான பொருள் ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் சிறிதளவு கிரீம் பால்.

கடலை மாவுடன் கிரீம் பால் ஊற்றி நன்கு பேஸ்ட்டாக கலக்கி அதை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற விடுங்கள். அதன் பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு கழுவுங்கள்.

இப்படி செய்யும் போது இந்த பேக் உங்கள் சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். இது மழைக்காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த பேக்.

முகப்பரு பிரச்சினையால் பாதிக்க பட்டவர்களுக்கு கடலை மாவு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஏனென்றால் கடலை மாவில் துத்தநாகம் உள்ளது.