முகத்தின் அழகை கெடுக்கும் மருக்கள் மறைய எளிய வழிகள்

முகத்தில் உள்ள மரு மறைய எளிய வழிகள் உங்களின் முக அழகை கெடுக்கும். முகத்தில் திடீரென்றோ அல்லது இயற்கையாகவோ உள்ள கருமை நிற மருக்களை போக்க சில எளிய வழிமுறைகள் உங்களுக்காக.

வெங்காயம், பூண்டு, இஞ்சி போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக்கி, பிறகு ஒன்றாக சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு செய்த இந்த கலவையை இரவு தூங்கும்போது கருமை நிற மருக்களின் மீது வைத்துவிட்டு படுக்க வேண்டும். பிறகு காலையில் எழுந்து சுத்தமான நீரில் கழுவவேண்டும் இவ்வாறு தினமும் செய்து வந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

நாம் பயன்படுத்தும் விளக்கெண்ணெய் 1/2 டீஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் 1 டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவை எடுத்து குழைத்து கொள்ள வேண்டும் . பிறகு இந்த கலவையை நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை கருமை நிற மருக்களின் மீது தடவிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் 15 நாட்கள் முதல் ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்

நன்கு பழுத்த நல்ல வாசம் வரக்கூடிய ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை இரண்டு துண்டுகளாக நறுக்கி கருமை நிற மருக்களின் மீதும் , அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.