முகம் எப்போதும் பிரகாசமாக இருக்க எளிய வழிமுறை

முகம் எப்போதும் பிரகாசமாக வயதானது தெரியாமல் இருக்க உங்களுக்காக எளிய முறையில் சில டிப்ஸ்.

அனைத்து பெண்களுக்கும் ஒரே கவலை இருக்கும். அது என்னவென்றால் வயதாவது மட்டுமே. பெண்கள் சிலருக்கு குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் இருக்காது. அதனால் தங்களை தாங்களே கவனித்துக் கொள்ளாமல் இருந்து விடுவார்கள்.ஆனால் முக அழகு, முகத்தோற்றம் என்பதை அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று.

தன் முகம் அழகாகவும்,இளமையாகவும் இருக்க வேண்டும் என்று யாரும் நினைக்காமல் இருக்க முடியாது. இந்த முறையானது மிகவும் எளிமையான ஒன்று. இந்த எளிய முறையை வீட்டிலேயே பயன்படுத்தி இளமையாக மாறுங்கள்.

ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சமையல் சோடா உப்பை போடவும். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு காய்ச்சாத பாலை ஊற்றவும். அதன்பின் 2 ஸ்பூன் பன்னீர் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். நன்றாக இந்த கலவையை கலக்கிக் கொள்ளவும்.

இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் பூசி நன்றாக 10 முதல்15 நிமிடங்கள் வரை காய வையுங்கள். நன்கு காய்ந்த பின் மறுபடியும் உங்களது முகத்தில் நீரை தெளித்து மீண்டும் ஒரு 15 நிமிடம் காயவைக்கவும்.

இப்பொழுது காய்ந்தவுடன் முகம் மற்றும் கழுத்தை கழுவிக் கொள்ளவும். இந்த முறையை 15 நாட்கள் தொடர்ந்து செய்து வரவும். அப்புறம் பாருங்க நீங்களே அசந்து போகிற அளவிற்கு அழகா ஆயிடுவீங்க.