ஒரு வாரத்தில் முகப்பரு தழும்புகள் காணமல் போக வேண்டுமா?

அழகான முகத்தில் சில நேரம் முகப்பருக்கள் ஏற்படுகிறது. இதனால் சிலருக்கு முகத்தில் பயங்கரமான வலி, வீக்கம், தழும்புகள் ஏற்படுகின்றன. இதனால் முகத்தில் உள்ள பொலிவு குறைகிறது.

இந்த முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் நான்கே நான்கு இயற்கையான பொருள்களை கொண்டே கட்டுப்படுத்தலாம்.

இதனால் முகம் பளபளப்பாக மாறுவது மட்டுமல்லாமல் தழும்புகள் மற்றும் புள்ளிகள் கூட வராமல் தடுக்கலாம். மேலும் மீண்டும் பருக்கள் வராமலும் தடுக்கலாம்.

தேவையான பொருட்கள்
கடலை மாவு
தயிர்
கடுகு எண்ணெய்
உப்பு

பயன்படுத்தும் முறை
பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை நீக்க கடலை மாவுடன் தயிர், சிறிதளவு கடுகு எண்ணெய்யை மற்றும் அவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து தழும்புகள் இருக்கும் இடங்களில் பூச வேண்டும். பின்பு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர ஒரு வாரத்தில் அந்த தழும்புகள் இருந்த இடம் காணமல் போகும்.