தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்வு .. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து உள்ளது.

உள்நாட்டில் பங்குசந்தையில் ஏற்படும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5980 க்கும், சவரனுக்கு ரூ.47,840க்கும் செய்யப்பட்டு வந்தது.

மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5510 க்கும், சவரனுக்கும் ரூ.44,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலை மீண்டும் உயர துவங்கி உள்ளது.

அதாவது, சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5985 க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.47,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5515 க்கும், சவரனுக்கும் ரூ.40 அதிகரித்து ரூ.44,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.