தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்தது!

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த அச்சம் நிலவி வருகிறது.

தங்கம் விலை சில தினங்களாக உயர்ந்து வந்தநிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது. இந்தநிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.4608 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.36,864க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 38,688 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 30 பைசா உயர்ந்து 53.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.