சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

சென்னை: ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த மாதம் தொடக்கம் முதலில் உச்சத்தை தொட்டது. அதன் பிறகு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் குறைந்து காணப்படுகிறது.

இதையடுத்து மே மாத தொடக்கத்தில் 46 ஆயிரம் ரூபாயாக அதிகரித்த தங்கத்தின் விலை ஜூன் மாதத்தில் சற்று குறைய தொடங்கி உள்ளது, சாமானியர்கள் மத்தியில் சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக தங்கம் விலை நேற்று முன்தினம் முன்தின்ம் சவரனுக்கு ரூபாய் 464 குறைந்தது.

நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து 1 கிராம் ரூ. 5570க்கு விற்பனையானது . அதேபோல் சவரனுக்கு ரூ.80 குறைந்து 1 சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 44 ஆயிரத்து 560 ஆக இருந்தது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. இதன் மூலம் கிராமுக்கு ரூபாய் 30 உயர்ந்து 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,600 ஆக விற்பனையாகிறது. இதன் மூலம் 1 சவரன் தங்கம் விலை ஆனது 44 ஆயிரத்து 800 ரூபாயை தொட்டு உள்ளது.