வரிகள் அதிகம் என்பதால் விரிவுப்படுத்த போவதில்லை; டொயோட்டா நிறுவனம் அறிவிப்பு

விரிவுப்படுத்தவில்லை... வரிகள் அதிகமாக உள்ளதால், இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்தப் போவதில்லை என டொயோட்டோ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டொயோட்டாவின் பிரிவான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டரின் துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன் இதைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தபின்னர் வரிகளை உயர்த்துவது, வெளிநாட்டு நிறுவனங்களை அரசு விரும்பவில்லையோ என்பதை காட்டுவதாக அவர் கூறினார். வரிகளை குறைக்காவிட்டாலும் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டோம் என்றார் அவர்.

டொயோட்டா கடந்த 1997ல் இந்தியாவில் செயல்பட துவங்கியது. இந்தியபிரிவின் 89 சதவிகித பங்குகளை ஜப்பானில் உள்ள அதன் தாய் நிறுவனம் வைத்துள்ளது.