400வது நாளாக விலை எந்த வித மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல்


சென்னை: தற்போது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து மாற்றியமைக்கப்படுகிறது.

திருத்தப்பட்ட டீசல் விலை தினசரி காலை 6 மணி முதல் அமலுக்கு வரும். அதன்படி, 400 வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
இதனால் பல்வேறு தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், தற்பொழுது பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து, ஞாயிற்று கிழமையான இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தினசரி விலை நிலவரங்களை வாகன ஓட்டிகள் அறிந்து கொண்டு செயல்படுவது சிறந்ததாக இருக்கும்.