ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் தங்கம் விலை 30 ஆயிரத்தில் இருந்து சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு தற்போது தங்கம் விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 296க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 912க்கு விற்பனையாகிறது.

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு அதிகரித்து 71 ரூபாய் 40 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.