ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென உயர்வு

சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.

இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால் அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4775.00 என விற்பனையாகிறது. அதேபோன்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 560 உயர்ந்து ரூபாய் 38200.00 என விற்பனையாகி வருகிறது.

மேலும் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5177.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41416.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 420 காசுகள் உயர்ந்து ரூபாய் 66.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 66700.00 எனவும் விற்பனையாகி வருகிறது