பங்குச்சந்தை .. இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடக்கம்

மும்பை: சென்செக்ஸ் 402 புள்ளிகள் உயர்வு .... மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 565 புள்ளிகள் உயர்வுடன் 58,465 ஆக இருந்தது. இதேபோன்று, தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 167 புள்ளிகள் உயர்வுடன் 17,208 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் 4 நாட்கள் நிலவி வந்த இறங்குமுகம் மாறி புதன்கிழமை வர்த்தகம், ஏற்றத்துடன் தொடங்தியது. அதன்படி காலை 09:50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 402.83 புள்ளிகள் உயர்வடைந்து 58,303.02 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 104.90 புள்ளிகள் உயர்வடைந்து 17,148.20ஆக இருந்தது.

அமெரிக்காவின் பணவீக்கம் பிப்ரவரியில் 6.4 சதவீதமாக குறைந்திருந்தது. இதனால் உலகளாவிய சந்தைகளில் சாதகமான சூழல் ஒன்று நிலவியது. எனவே இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் தங்களது முந்தைய சரிவில் இருந்து மீண்டு இன்று ஏற்றத்திலேயே வர்த்தகத்தைத் தொடங்கின.

இதனை அடுத்து தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல், கோடாக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி,ஐடிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம், விப்ரோ பங்குகள் உயர்வில் இருந்தன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் சரிவில் இருந்தன.