சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும்
அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன்
மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக
கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு
வருகிறது.
இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக
கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை
அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும்
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த
தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால்
அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
தங்கத்தின் விலை இன்று திடீரென்று குறைந்துள்ளது. விலை குறைவு.
அதன்படி, சென்னையில் சவரனுக்கு ரூ.80
குறைந்து 22 கேரட் ஆபரணத் தங்கமானது ரூ. 37,120-க்கு விற்பனை
செய்யப்படுகிறது. இதேபோல், கிராமுக்கு ரூ.10 குறைந்து 22 கேரட் ஆபரணத்
தங்கமானது ரூ.4,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை
ஒரு கிராமிற்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.62.40-க்கு விற்பனை
செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் பலரும் இது தான் தங்கம்
வாங்க சரியான நேரம் என்று கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.