2 பேர் வெளியேற்றம்... 2 பேர் வீட்டின் உள்ளே வருகின்றனர்

சென்னை: பிக்பாஸ் வீட்டில் விஜய் வர்மா மற்றும் அனன்யா எஸ் ராவ் ஆகிய இருவர் தான் வீட்டுக்குள் மீண்டும் வந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியே போவார்கள் என்றும் அதற்கு பதிலாக ஏற்கனவே எலிமினேட் ஆன இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள் என்றும் அறிவிக்கப்ட்டது.

அது யாராக இருக்கும் என ரசிகர்களும் குழப்பத்தில் இருந்தார்கள். இந்த வாரம் அக்ஷயா மற்றும் பிராவோ ஆகியோர் வெளியேறுவது உறுதியாகி இருக்கிறது.

தற்போது உள்ளே வந்தது யார் என்று தகவல் உறுதியாகி இருக்கிறது. விஜய் வர்மா மற்றும் அனன்யா எஸ ராவ் ஆகிய இருவர் தான் வீட்டுக்குள் மீண்டும் வந்திருக்கிறார்கள்.

அவர்கள் பிக் பாஸ் 7ம் சீசனில் முதலிலேயே வெளியே போனவர்கள் என்பதால், அவர்களுக்கு மீண்டும் 2ம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.