சினிமா மறந்து நியூசிலாந்தில் செட்டில் ஆன நடிகர் அப்பாஸ்

சென்னை: நியூசிலாந்தில் செட்டில் ஆனார்... நடிகர் அப்பாஸ் தற்போது சினிமாவில் இருந்து விலகி நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார்.

கதிர் இயக்கிய காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமான அப்பாஸ், உடனடியாக தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் ஆனார். அதன் பிறகு பல படங்களுக்கு புக் செய்யப்பட்டார்.

ஆனால் விஜய் அஜித்தைப் போல அதிரடி வேடங்களில் நடிக்கவில்லை. இதனால் ஒரு சில படங்கள் மட்டுமே ஹிட் ஆகி பல படங்கள் தோல்வியடைந்தன. இதனால் ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்கள் வர ஆரம்பித்து கடைசியில் வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பாஸ் சில விளம்பரகளில் மட்டும் நடித்து காணாமல் போனார்.

தற்போது நியூசிலாந்தில் குடியேறியுள்ள அவர், ஒரு நடிகர் சினிமாவை விட்டு ஒட்டு மொத்தமாக விலகியதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் இதனை பகிர்ந்துள்ளார்.

தற்போது சிசிஎல் எனப்படும் நடிகர்களுக்கான கிரிக்கெட் தொடரை ஆரம்ப காலத்தில் தொடங்கி ஒருங்கிணைத்தவர். அதன் மூலம் கிடைத்த பிரபலத்துக்குப் பிறகு ஒரு நடிகர் அவரைப் பார்த்து பொறாமைப்பட்டு ஓரங்கட்டி கிண்டல் செய்ததை வருத்தத்துடன் சொன்னார். இதுவும் சினிமாவை விட்டு விலக ஒரு காரணமாக கூறப்படுகிறது.