செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ்... புதுப்பேட்டை 2ம் பாகமா?

நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் தனுஷ் ஆனந்த் எல்.ராய் இயக்கும் 'அத்ரங்கி ரே' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார். அதை முடித்து விட்டு செல்வராகவன் இயக்கும் படத்துக்கு வருகிறார்.

மேலும் ஹாலிவுட் படமொன்றிலும் நடிக்கிறார். செல்வராகவன் பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. செல்வராகவனுடன் பல படங்களில் பணியாற்றிய யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர் இந்த படத்திலும் இணைகிறார்கள்.

இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:- என்னை செதுக்கிய செல்வராகவனுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. இந்த தடவையாவது அவரை கவர்வேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த படம் புதுப்பேட்டை 2-ம் பாகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே புதுப்பேட்டை 2-ம் பாகத்தை எடுப்பேன் என்று செல்வராகவன் கூறியிருந்தார்.