நடிகர் பூ ராமு மாரடைப்பால் காலமானார்

சென்னை; பூராமு காலமானார்... முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினரும், நாடக, திரைக் கலைஞருமான 'பூ' ராமு காலமானார். மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சென்னை இராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிர் பிரிந்தது.

தமிழ் சினிமாவில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் பூ ராமு. கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் பூ ராமு.

இதற்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் பூ ராமு நடித்திருந்தார். இருப்பினும் பூ படமே அவரை ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காணச் செய்தது.


அதன்பின் நீர்பறவை, தங்க மீன்கள், பரியேரும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார். இந்நிலையில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சென்னை இராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிர் பிரிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.