முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த நடிகர் ரஜினி

உத்தரபிரதேசம்: நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். ஜெயிலர் ரிலீஸுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றார்.

ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமம், பத்ரிநாத் கோயில் என பல இடங்களுக்கு ரஜினி சென்றுள்ளார்.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்தி பென் ஆகியோரை சந்தித்து உத்திரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுடன் ‘ஜெயிலர்’ படத்தை பார்த்தார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்தார். இன்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த், “9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவுடன் நட்பு ஏற்பட்டது. செல்போனில் பேசிக் கொண்டிருந்தோம். 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்தபோது அவர் இல்லை. அதனால் அவரை இப்போது சந்தித்தேன் என்றார்.