பர்ஹானா படத்தில் புதிய கேரக்டரில் நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை : பர்ஹானா படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இதுவரை கண்டிராத கேரக்டரில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கும் ‘பர்ஹானா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இதுவரை கண்டிராத கேரக்டரில் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் செல்வராகவனுடன் ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


கவிஞரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதினார். படத்தின் திரைக்கதையை இயக்குனர் நெல்சனுடன் இணைந்து திரைக்கதை எழுத்தாளர்கள் ஷங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் எழுதியுள்ளனர். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.