நடிகை ஆண்ட்ரியா தனது சொந்த குரலில் டப்பிங் செய்கிறார் ..

நடிகை ஆண்ட்ரியா 'பிசாசு 2' படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கான முதன்முறையாக சொந்தக் குரலில் தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார்.மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'பிசாசு' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதையடுத்து தற்போது பிசாசுபடத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. நடிகை ஆண்ட்ரியாஇரண்டாம் பாகத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

கார்த்திக் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக் ராஜா இந்தப் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆண்ட்ரியா 'பிசாசு 2' படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கான டப்பிங்கை நிறைவு செய்துள்ளார். அவர் தெலுங்கில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசுவது இதுவே முதல் முறையாகும்.